பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கித்வாய் நகர் பகுதியில், இரண்டு பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அந்தப் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்றனர். எக்ஸ் (X) வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி, அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது.
Failed robbery attempt in Ludhiana's Kidwai Nagar: Two armed robbers on bike tried to snatch from women on scooter, but fled after brave resistance. Incident caught on CCTV! 🚨
https://t.co/Kn6QCqieYi— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 16, 2025
அந்தக் கொள்ளையர்கள் பெண்களிடம் இருந்த உடைமைகளைப் பறிக்க முயன்றபோது, பெண்கள் சற்றும் அஞ்சாமல் அவர்களைத் தடுத்துப் போராடினர். திருடர்களில் ஒருவன் அரிவாளைக் காட்டி மிரட்டிய போதிலும், பெண்களின் துணிச்சலான எதிர்ப்பால் நிலைதடுமாறிய கொள்ளையர்கள் பயந்துபோய் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆபத்தான சூழலிலும் தங்களின் உடைமைகளைக் காக்க அந்தப் பெண்கள் காட்டிய வீரம் தற்போது சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
