
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு தீவிர சிகிச்சை பிரிவின் கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் நோயாளிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
அந்த கட்டடம் ஏற்கனவே பொதுப்பணித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு பொருத்தமல்ல என்பது குறித்து ஆறு மாதங்களுக்கு முன்பு சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்த போதிலும் அந்த இடத்திலேயே தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டது.
இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிடத்தின் முழு பாதுகாப்பு தன்மையை ஆய்வு செய்து புதிய கட்டிடம் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது