திருப்பூர் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அறுபதாவது திருமண நாளுக்காக குடும்பத்தினர் அனைவரும் திருக்கடையூர் கோவில் சென்று திரும்பி உள்ளனர். இந்த நிலையில் அதிகாலை காங்கேயம் அருகே பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.