உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7வது ஊதிய குழுவின் அடிப்படையில் சம்பளம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த முறை அகலவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் அகலவிலைப்படி உயர்வு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் புதுப்பிக்கப்படும். அதன்படி இந்த மாதம் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது. மேற்குவங்க மாநில அரசு இந்த வாரம் பட்ஜெட் சமர்ப்பணத்தின்போது ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வை அறிவித்தது. ஆனால் உத்திரபிரதேசம் மாநில அரசு  இதுவரை இது குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது.