மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தனியார் நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் மூலமாக விருதுகள் வழங்கப்படுவது குறித்த புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதாவது அகில இந்திய சேவைகளில் உறுப்பினர்கள் பணம் அல்லது பணம் சார்ந்த வசதிகளை கொண்ட விருதுகளை பெற முடியாது. அகில இந்திய சேவைகளின் உறுப்பினர்கள் ஏழாவது ஊதிய குழுவின் படி ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் ஆவார்கள்.

தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் வழங்கும் விருதுகள் ஆனது சம்பந்தப்பட்ட அதிகாரியின் முன் அனுமதியை பெற வேண்டும். அதற்கான முழு பொறுப்பும் சம்பந்தப்பட்ட துறை அல்லது அதிகாரியை சேர்ந்ததாக இருக்கும். அதே சமயம் விருது வழங்கும் நிறுவனம் எந்தவித குற்றங்களும் அற்ற நற்சான்றிதழ்கள் பெற்றதாக இருக்க வேண்டும் என மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.