மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு வருகின்ற மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நீட் நுழைவு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் இன்று முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சிக்காக தமிழக முழுவதும் 330 மையங்கள் அமைக்கப்பட்டு 13 ஆயிரத்து 304 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.