இயற்கையின் சீற்றத்திற்கு மனித உயிர்கள் பலியாவது தொடர்கதையாகி வரும் நிலையில், மும்பையின் புறநகர்ப் பகுதியான காட்கோப்பரில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம் ஒத்த மும்பையையும் உலுக்கியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, அதிகாலை 4 மணி அளவில் மக்கள் அனைவரும் வீடுகளில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நேரத்தில், திடீரெனக் குன்றின் மேலிருந்து பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகளின் மீது விழுந்துள்ளது. இதில் இரண்டு வீடுகள் முற்றிலுமாக இடிபாடுகளுக்குள் சிக்கி நசுங்கியதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை வேளையில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் நொறுங்கிய சத்தம் கேட்டு, அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாகத் திரண்டு மீட்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியை தீவிரப்படுத்தினர்.
இருப்பினும், நிலச்சரிவின் போது மண் மற்றும் பாறைகள் வீடுகளின் மீது பலமாக விழுந்ததால், இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கிக் கொண்டனர். அவர்களை உயிருடன் மீட்க மீட்புக் குழுவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். மழைக்காலத்தில் குன்றுப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு என்பது ஆண்டாண்டு காலமாக கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இதுபோன்ற இயற்கை பேரிடர்களின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது. கனமழை நீடித்து வருவதால் அப்பகுதியில் மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் கருதி, சுற்றியுள்ள வீடுகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
#WATCH | Maharashtra: DCP Ganesh Shinde says, “Due to the rain, a landslide has occurred in the Ashoknagar area under the jurisdiction of the Ghatkopar police. Two bodies have been recovered so far, and rescue operation is underway. Police personnel are deployed here, along with… https://t.co/K5WzS9hNw5 pic.twitter.com/34bfQwz5VP
— ANI (@ANI) August 12, 2026
“>
