எல்லை தாண்டி அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வது ஆவினுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என CM ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், ஆவினுக்கு போட்டியாக களம் இறங்கவில்லை என அமுல் நிறுவனத்தின் தமிழக பொறுப்பாளர் விளக்கமளித்துள்ளார். ஆவின் நிறுவனம் நிர்ணயித்துள்ள விலைக்கே பால் கொள்முதல் செய்வதாகவும் தனியார் நிறுவனங்கள் உட்பட யாரும் செல்லாத குக்கிராமங்களிலேயே கொள்முதல் செய்து வருவதாகவும் கூறினார்.

மேலும் விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு பால் கொள்முதல் செய்து வருகின்றது. விவசாயிகள் பாதிப்பை தடுக்கவே அமுல் செயல்படும். ஆவின் நிறுவனத்திற்கு எதிராக செயல்படாது” என தெரிவித்துள்ளது.