தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவராக இருந்த டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார். இவரின் மறைவு திரைத்துறையை சேர்ந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தன் அம்மா மீது அதிக பாசம் கொண்ட டேனியல் பாலாஜி அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னை ஆவடியில் அங்களா பரமேஸ்வரிக்கு கோயில் கட்டியுள்ளார். கடந்த மார்ச் 9ஆம் தேதிதான் கோயிலின் கும்பாபிக்ஷேகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.