திருப்பதி கோவிலில் கடந்த வருடம் மற்றும் 1398 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வந்துள்ளதாக கோவில் தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மட்டும் இரண்டு கோடியே 52 லட்சம் பேர் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். கடந்த சில வருடங்களாக கொரோனா உள்ளிட்ட காரணங்களால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டில் அப்படியான கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாததால் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளனர்.