சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல், கணையத்திலும், மூளை பகுதியிலும் உள்ள கட்டிகளை மருந்துகளால் கரைக்க திட்டமிட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூளையில் ஏற்பட்டுள்ள கட்டியால், செந்தில் பாலாஜிக்கு முதுகுத்தண்டில் வலி ஏற்படுகிறது.

கை, கால் மரத்துப் போகாமல் இருக்க, தினந்தோறும் இரண்டு முறை பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்படுகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு ஜாமீன் கோரியுள்ள நிலையில், தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.