அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் எம் ஆர் ஐ மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வருகின்ற நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரது நீதிமன்ற காவல் 10வது முறையாக வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சாட்சிகளை கலைத்து விட வாய்ப்புள்ளதால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.