அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம் என அமைச்சர்களுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக சார்பாக நடைபெறவுள்ள மாநாடு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியால் அனைத்து அமைச்சர்களும் தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். செந்தில் பாலாஜி வாயை திறந்தால் யார் யார் உள்ளே போகப் போகிறார்கள் என தெரியவில்லை. அனைத்து அமைச்சர்களுக்கும் தற்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.