அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுயி தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டுத்தீ பரவி ஏராளமான இழப்புகள் ஏற்பட்டது. இந்த காட்டுத்தீக்கு 115 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1700 களில் உருவாக்கப்பட்ட வரலாற்று சுற்றுலாத்தலமான லஹேனா நகரமும் இந்த காட்டுத்தியில் பாதிக்கப்பட்டது. இந்தக் காட்டு தீ விபத்தினால் 271 கட்டுமானங்களும் 19000 வீடுகள் கடைகள் போன்றவையும் சேதமடைந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் இருந்து பரிசாக வழங்கப்பட்ட 150 வருட பழமை வாய்ந்த ஆலமரமும் இந்த காட்டுத்தீயில் கருகி உள்ளது. மீட்பு குழுவினர் இந்த காட்டுத்தீயில் சிக்கிய பலரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் ஏராளமானோர் மாயமாகியுள்ளனர். இந்நிலையில் மாயமானவர்களின் விபர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது லஹேனா மற்றும் மத்திய பகுதிகளிலிருந்து காணாமல் போன 388 பேர் பற்றிய அடையாளத்தை மத்திய புலனாய்வு அமைப்பாளர் எஃப்பிஐ கண்டறிந்துள்ளது. இதையடுத்து 388 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க காட்டு தீ விவகாரம்…. 388 பேர் மாயம்…. பெயர் பட்டியல் வெளியீடு….!!
Related Posts
விண்வெளியை குப்பை மேடாக மாற்றிய மனிதன்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!
உலக அளவில் அதிகரிக்கும் செயற்கைக்கோள் மற்றும் விண்கல குப்பைகளால் எதிர்காலத்தில் விண்வெளியில் நெரிசல் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 1957 முதல் இன்று வரை சுமார் 8000 செயற்கை கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் தற்போது 3000 செயற்கைக்கோள்கள் தான் இயங்குகின்றன.…
Read moreரூ.16,000 கோடி செலவு…. ஆனாலும் பயனில்லை…. உலகின் உயரமான காலியான ஹோட்டல் இதுதான்….!!!
வடகொரியா நாட்டின் தலைநகரில் உலகின் உயரமான மற்றும் காலியான கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் Ryugyoung என்று அழைக்கப்படுகிறது. இது கட்டிடம் ஹோட்டல் நிறுவுவதற்காக கட்டப்பட்ட நிலையில் இதுவரை ஹோட்டல் நிறுவப்படவில்லை. இந்த கட்டிடத்தின் உயரம் 1082 அடி ஆகும். இதில்…
Read more