அமெரிக்க அரசு இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்நாட்டு அரசு இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு விசா வழங்க முடிவு செய்துள்ளது. எச்1 பி மற்றும் எல் ஒன் விசா வழங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இரு நாடுகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும் என்று அமெரிக்க அதிபரின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களின் பிரதிநிதி டொனால்ட் லு கூறியுள்ளார். இதனிடையே தொழில் வல்லுனர்களுக்கு அமெரிக்கா அதிக எண்ணிக்கையிலான விசாக்களை வழங்குவது குறிப்பிடத்தக்கது.