தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் 2 பாகங்களாக படத்தை இயக்கியிருந்தார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எஸ். சந்திரமௌலி என்பவர் எழுதியுள்ளார். இந்த புத்தகத்திற்கு கல்கி பொன்னியின் செல்வர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை இன்று மணிரத்தினம் வெளியிட அமரர் கல்கியின் பேத்திகளான சீதாரவி மற்றும் லட்சுமி நடராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.