தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. மயோசிடிஸ் செல்லும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா தன்னுடைய உடல்நலம் தற்போது முன்னேறி வருவதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

நடிகை சமந்தா படி வழிப்பாதையில் நடந்து சென்று 600 படிகளில் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.