கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் யஷ். இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்த கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு கேஜிஎஃப் 3 ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கேஜிஎப் 3 ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கேஜிஎப் 3 படத்தின் ஷூட்டிங் 2025-ம் ஆண்டு தொடங்கப்பட இருக்கிறது. அதன் பிறகு 2026-ம் ஆண்டு படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேஜிஎஃப் 2 கடலில் ராக்கி பாய் விழும் காட்சியோடு நிறைவடைந்ததால், அடுத்த பாகம் கடலை மையப்படுத்தி தான் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கடலில் மிக பிரம்மாண்டமாக படத்தை எடுப்பதற்கு படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கேஜிஎஃப் படத்தின் ஐந்தாம் பாகத்திற்கு பிறகு யஷ்ஷுகு பதில் வேறொருவரை ஹீரோவாக மாற்றுவதற்கு படக்குழு முடிவு ‌ செய்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.