ஹரியானாவின் குஹ்லா தொகுதியில், ஜேஜேபி எம்எல்ஏ ஈஸ்வர் சிங்குக்கு எதிராக உள்ளூர் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட சென்ற போது, பெண் ஒருவர் எம்எல்ஏ-வை கன்னத்தில் அறைந்தார். “இப்ப எதுக்கு வந்தீங்க?” என்று கோபமாக கையை உயர்த்தி, ஆக்ரோஷமாக தாக்க முயன்றதால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காகர் ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை எனக்கூறி மக்கள் வெகுண்டெழுந்தனர்.