காங்கிரஸ் அரசு 5 கிலோ அரிசி வழங்கும் அன்னபாக்யா திட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா சமீபத்தில் தொடங்கி வைத்தார் . 34 ரூபாய் என்ற விகிதத்தில் நேரடி பலன் பரிமாற்ற திட்டத்தின் மூலமாக பணமும் வழங்கப்படுகின்றது. அந்தியோதயா மற்றும் பிபிஎல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு ஐந்து கிலோ அரிசியில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை பிரிவின் கீழ் 1.28 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றில் 99 சதவீத கார்டுகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.