தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு  மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையயில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தரமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 748 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேஷன் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.