தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக மடிக்கணினி வழங்கப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகின்றது. இது தொடர்பாக பேசிய புதுச்சேரி முதல்வர் விரைவில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் லேப்டாப் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

காரைக்காலில் அரசு பள்ளி மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர் சுற்றுலாவை மேம்படுத்த தனி கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். அதேசமயம் புதுச்சேரியில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் மற்றும் அமைச்சர் பதவி விரைவில் நிரப்பப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.