தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா அவ்வப்போது நாகசைதன்யாவை விவாகரத்து செய்துகொண்ட நாட்களை நினைவுப்படுத்தி பேசி வருகிறார். இப்போது சாகுந்தலம் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் விவாகரத்து செய்து கொண்ட போது உங்களுக்கு எதிராக வந்த விமர்சனங்கள் பற்றி சொல்லுங்கள் என கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்து சமந்தா கூறியதாவது, “அந்த வேதனையில் இருந்து நான் இன்னும் மீண்டு வரவில்லை. நான் எவ்வளவோ கஷ்டங்கள், கண்ணீர், வேதனைகளை பார்த்தேன். எனினும் முன்னோக்கி அடியெடுத்து வைத்தேன். குடும்ப உறுப்பினர்கள், சினேகிதர்கள் என்னோடு இருந்தனர். அவர்களால் தான் நான் தற்போது இங்கு உள்ளேன். எனினும் அந்த வேதனையில் இருந்து நான் இன்னும் முழுமையாக மீளவில்லை” என்று அவர் கூறினார்.