மேக்கப் இன்றி கேமரா முன் வர பல நடிகைகள் தயங்கும் நிலையில், தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகியாக வலம் வரக்கூடிய சாய் பல்லவி படங்களில் மேக்கப் போடாமலேயே நடித்து வருகிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் “எனது முதல் திரைப்படமான பிரேமம் படத்தில் இருந்து இன்று வரை நான் ஒரு படத்தில் கூட மேக்கப் போட்டதில்லை.

பள்ளி நாட்களில் எனக்குள் தாழ்வு மனப்பான்மையானது அதிகளவு இருந்தது. முகத்திலுள்ள முகப்பருக்களை பார்த்து வேதனைப்படுவேன். என்னுடைய குரல் கூட நன்றாக இருக்காது என நினைத்தேன். பிரேமம் திரைப்படத்தில் மேக்கப் இன்றி நடித்ததை ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்களோ என்று முதலில் பயந்தேன். எனினும் மேக்கப் இன்றி மிகவும் அழகாக இருக்கீங்கன்னு பாராட்டு எனக்கு கிடைத்தது. அன்று முதல் மேக்கப் இன்றி நடித்து வருகிறேன்” என்று சாய் பல்லவி கூறினார்.