நடிகை ஸ்ரேயா நடித்த “கப்சா” படம் பான் இந்தியா திரைப்படமாக மார்ச் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் ஸ்ரேயா கூறியதாவது, “தமிழ் திரைப் படங்களில் நடிக்கவேண்டும் என்பது தான் என் விருப்பம் ஆகும். தமிழ் சினிமா எனக்கு பல நல்ல படங்களை கொடுத்து உள்ளது. ஷங்கர் சார் போன்ற பெரிய டைரக்டருடன் வேலை பார்த்திருக்கிறேன்.

திருமணமாகி குழந்தை பெற்றது, பின் கொரோனா என ஒரு சின்ன பிரேக் இருந்தது உண்மை தான். அதிலும் குறிப்பாக கொரோனா காலத்தில் மீண்டும் வேலை செய்வோமா என்ற நிலை தான் பலருக்கும் இருந்தது. அதனால் இனிமேல் வேலை செய்யும் ஒவ்வொரு நாளையும் மதிப்புமிக்கதாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.