அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஏற்கனவே அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுடன் சேர்த்து மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 2523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 1000 பேரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக பொதுக்கூட்டத்தில் தமிழ் மகன் உசேன் பேசியதாவது, எளிய தொண்டர்களோடு இந்த இயக்கத்திற்கு வரலாம். இந்த மேடையை அலங்கரிக்கலாம் என்று ஆர்ப்பரித்து அறைகூவல் விட்ட உன்னத தளபதி யார் என்று கேட்டால்…? அவர்தான் சேலத்து மாங்கனி. சேலத்து சிங்கம். 2 கோடி தொண்டர்களின் இதய நாயகன். சாதாரண தொண்டர்களை எல்லாம் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்ற உத்தம தளபதி எடப்பாடியார்.

எடப்பாடியார் அவர்களை என் இதயம் உள்ளவரை என் மூச்சு உள்ளவரை, தந்தை பெரியார் மேடையில் பேசிய 17 வயதிலேயே துவங்கிய இந்த தமிழ் மகன் உசேன் 87 வயதிலே உன்னை பாராட்டுகிறேன். என் தங்கமே 87 வயதில் உன்னை பாராட்டுகிறேன். இறைவன் தந்த வரப்பிரசாதம் என பேசியுள்ளார். தங்கமே என கூறியதும், எடப்பாடியார் மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்தார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.