ஹரியானா மாநிலம் கர்னாலில், ஒரு விஞ்ஞானியின் வயதான தாயார் வீட்டில் தனியாக இருந்தபோது, கொள்ளை முயற்சியின் போது கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகாந்த் என அடையாளம் காணப்பட்ட ஒரு பள்ளி வேன் ஓட்டுநர், அந்த மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த முதியவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரை தரையில் தள்ளி கழுத்தை நெரித்துக் கொலை செய்ய அந்த ஓட்டுநர் முயன்றதாகக் கூறப்படுகிறது.
Scientist’s Elderly Mother Allegedly Attacked by School Van Driver During Robbery Attempt in Karnal
📍Karnal, Haryana: A school van driver identified as Krishankant was allegedly caught after breaking into the house of an elderly woman, mother of a scientist, and attempting to… pic.twitter.com/iIDDlvFDSw— Deadly Kalesh (@Deadlykalesh) May 9, 2026
மூதாட்டியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, அந்த ஓட்டுநரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிருஷ்ணகாந்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பள்ளி வேன் ஓட்டுநரே இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
