தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை தனுஷுக்கு முன்பாக சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஐபி 2 படத்திற்கு முன்பாக இந்த படத்தை ஆரம்பிப்பதாக இருந்தது.

அதனை நிறுத்திவிட்டு விஐபி 2 படத்தை சௌந்தர்யா இயக்கியுள்ளார். தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை தனுஷ் இயக்க உள்ளார். இது நல்ல காதல் கதை, மிஸ் ஆகிவிட்டது என்று சௌந்தர்யா பேசியுள்ளார்.