இந்திய பிரதமர் மோடி வாரணாசியில் கங்கா விலாஸ் என்று சொகுசு கப்பலைகடந்த  13-ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் இருந்து கிளம்பி பாட்னா நகரை சென்றடைந்து அங்கிருந்து கொல்கத்தாவுக்கு செல்லும். அதன் பிறகு சொகுசு கப்பல் வங்காளதேசத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டும் இந்தியா திரும்பும். இந்த சொகுசு கப்பல் பயணம் அசாமில் உள்ள திருப்கார் நகரில் முடிவடையும். இந்நிலையில் சொகுசு கப்பலில் 80 பயணிகள் வரை பயணம் செய்யலாம்.

இந்த சொகுசு கப்பல் உலக பாரம்பரிய தளங்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நின்று செல்வதோடு, தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் வழியேயும் கடந்து செல்லும்என்று கூறப்பட்டது. இந்நிலையில் சொகுசு கப்பல் பீகாரில் உள்ள சாப்ரா என்ற பகுதிக்கு சென்ற போது ஆழமற்ற பகுதியில் திடீரென கப்பல் தரை தட்டியது. இதனையடுத்து சிறிய படகுகள் மூலம் கப்பலில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டு தொல்லியல் தளமான சிராத்தம் சரண் என்ற பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு வெளியே அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.