பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அண்ணாமலை பற்றி பாஜக மேலிடத்தில் அதிமுக சார்பாக புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் கூட்டணியை மறு பரிசீலனை செய்வது பற்றி முடிவு என ஈபிஎஸ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.