அதிமுக தோல்வியடைந்ததற்கு, காரணம் ஓபிஎஸ் என்ற விஷ நாகப்பாம்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் 1.5 லட்சம் ஓட்டுகளில் அதிமுக தோல்வியடைந்தது, அதற்கு காரணம் ஓபிஎஸ் என்ற விஷ நாகப்பாம்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் விமர்சித்துள்ளார்.

ஈரோட்டில் கட்சி பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், ஓபிஎஸ் என்ற அந்தப் பாம்பை ஒழிக்க வேண்டும். அதற்காகத்தான் அதிமுக தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது. மத்திய அரசை ஆதரித்ததன் காரணமாக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த போது பல்லாயிரக்கணக்கான கோடிகளை வாங்கி வந்தார் என தெரிவித்தார்.