தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது மட்டுமல்லாமல் மக்களுக்கு வேண்டிய புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திமுகவின் திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 1896 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மனுக்கள் வரும் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தனது தொகுதியில் மூன்று முக்கிய பணிகள் நிறைவேற்றப்பட்டதாக அதிமுக அமைச்சர் செங்கோட்டையனே நன்றி கூறியுள்ளார் என முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்