வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் கைகளுக்கு வலு சேர்க்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற ரமலான் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி, இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேற சொல்வது பாசிசம், அத்தனை பேரும் எங்கள் வீட்டுக்கு வாருங்கள், அடைக்கலம் கொடுக்கிறோம் என்பதை திராவிடம். அதிமுகவை வீட்டுக்கு அனுப்பியது போல பாஜகவையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பகிரங்கமாக பேசியுள்ளார்.