அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்பட்டதால் புரட்சி பாரதம் கட்சி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் திருவள்ளூர் தொகுதியை கட்சி எதிர்பார்த்த நிலையில் அந்த தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் கட்சியின் அவசரக் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதிமுகவுக்கான ஆதரவை திரும்ப பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இபிஎஸ்ஸுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.