அமமுக மற்றும் அதிமுக இணைந்து செயல்பட தொடங்கி விட்டதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வைத்தியலிங்க இல்ல திருமண விழாவில் பேசிய அவர், சிலரின் பேராசையால் கனத்த இதயத்தோடு பிரிந்து அமமுக தொடங்கினோம். இப்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக நிர்வாகிகளை ஒரே மேடையில் சந்திப்பதை இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அம்மாவின் ஆட்சியை அமைக்க இணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொடுக்க பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சிலரின் சுயநலத்தால் தொண்டர்கள் பிரிந்து இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. துரோகிகளுக்கு பாடம் கற்பித்து திமுகவை அகற்ற இணைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.