விழுப்புரம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கட்சியின் வெற்றியானது அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த பெரிய அடி என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் தலைமையை மீறி அக்கட்சியினர் திமுகவுக்கு வாக்களித்துள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அடி. திமுக கூட்டணிக்கு மகத்தான எதிர்காலம் உள்ளது என்பதை இந்த இடைத்தேர்தல் முடிவு உணர்த்திஇருக்கிறது என்று கூறியுள்ளார்.