எகிப்து நாட்டின்  சர்வதேச கடற்கரைச் சாலையில் ஏற்பட்ட பயங்கர மோட்டார் சைக்கிள் விபத்தில், அந்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பிரபலமான இருசக்கர வாகன ஓட்டுநர்களான காலித் ஃபாரூக் மற்றும் அனாஸ் அலி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் எகிப்திய மோட்டார் சைக்கிள் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று அவர்கள் இருவரும் தங்களது பைக்குகளில் கடலோர நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற ஒரு தனியார் பயணிகள் கார் எவ்வித சிக்னலும் இன்றி திடீரென இவர்களது பாதையில் திரும்பியுள்ளது.

இந்த எதிர்பாராத திருப்பத்தால் அதிர்ச்சியடைந்த ரைடர்களில் ஒருவர் நிலைதடுமாறி, அருகில் வந்த மற்றொரு பைக் மீது பயங்கரமாக மோதியுள்ளார். இந்த அதிவேக மோதலின் தாக்கத்தால் இரண்டு பைக்குகளும் அடுத்த நொடியே கொழுந்துவிட்டுத் தீப்பிடித்து எரிந்ததில், இருவருக்கும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

<a href=”http://

“>

சில நாட்களுக்கு முன்புதான் மூத்த எகிப்திய நடிகரும், மோட்டார் சைக்கிள் ஆர்வலருமான முகமது மர்சபான் இதேபோல ஒரு நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் இரு பிரபல ரைடர்கள் பலியாகியிருப்பது எகிப்தின் சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களின் விழிப்புணர்வு குறித்த கடுமையான கேள்விகளையும், போக்குவரத்து விதிகளைத் தீவிரமாக அமல்படுத்தக் கோரும் விவாதங்களையும் அந்நாட்டில் மீண்டும் எழுப்பியுள்ளது.