அதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு என்பதில் விலக்கு அளிக்காமல் மத்திய அமைச்சர்கள் அதானியை பாதுகாத்து வருகின்றனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இறுதி நாள் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி சீனா மிகப்பெரிய பொருளாதாரம் கொண்டது. நாம் எப்படி அவர்களுடன் சண்டையிட முடியும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசியது தேசியவாதம் அல்ல கோழைத்தனம் என கூறினார்.

தொழிலதிபர் அதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு என்று நாடாளுமன்றத்தில் தான் கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி அதற்கு இதுவரை பதிலளிக்காமல் அமைச்சர்கள் அதானியை பாதுகாத்து பேசி வருகின்றனர் என குற்றம் சாட்டினார். நான் மேற்கொண்ட யாத்திரையில் நிறைய கற்றுக் கொண்டதாக கூறினார். யாத்திரையின் போது விவசாயிகளில் அனைத்து பிரச்சனைகளையும் கேட்டேன். அவர்களின் வழியையும் உணர்ந்தேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.