அதானி குழுமம் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி உள்ளது. கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில்  அதானி குழுமம் ஈடுபட்டிருப்பதாக ஹண்டன்பர்க் நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதானி நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை  ஐந்து நாட்களில் 52 சதவீதம் சரிந்துள்ளது. அதேபோல் அதானி குழுமத்தை  சேர்ந்த மற்ற  நிறுவனங்களின் பங்குகளும் சரிந்துள்ளது.

அதானி பங்குகள் சரிவடைந்த காரணத்தினால் கடந்த சில தினங்களாக lic, sbi நிறுவனங்களும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஏனென்றால் அதானி நிறுவனங்களில் எல்ஐசி நிறைய முதலீடு செய்துள்ளது. மேலும் அதானி குழுமத்திற்கு  sbi வங்கி நிறைய கடன் வழங்கியுள்ளது. இந்நிலையில் அதானி நிறுவனங்களுக்கு இந்திய வகிகள் வழங்கிய கடன் விவரங்களை கேட்டு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி  உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதானி குழுமத்தின் நிறுவனங்களுக்கு எஸ்.பி.ஐ வங்கி சுமார் 21,000 கோடி ரூபாய் கடன் வழங்கியிருப்பதாகவும் Bloomberg ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

விதிமுறைகளில் படி அனுமதிக்கப்பட்ட தொகையில் இது பாதி தொகை எனவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. ஒரு பக்கம் அதானி பங்குகள் சரிந்து கொண்டிருக்கின்ற நிலையில் அதானி நிறுவனத்தின் கடன் பத்திரங்களின் மதிப்பும் மோசமாக சரிந்துள்ளது. இதன் காரணமாக அதானி நிறுவனங்களின் கடன் பத்திரங்களை இனி பிணையாக  ஏற்க முடியாது என அமெரிக்காவை சேர்ந்த சிட்டி குரூப் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த கிரெடிட் சூயிஸ் போன்ற நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளது.