உத்திரபிரதேச மாநிலம் மகேஷ்பூரை சேர்ந்தவர் அஜ்மி. 22 வயதாகி திருமணமான இவர் தன்னுடைய கணவர் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீது கபிசி கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது கணவர் உட்பட அந்த 6 பேரும் சேர்ந்து தன்னை வரதட்சணை கொடுமைக்கு ஆளாக்கினார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் தனக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானதாகவும், 5 மாத ஆண் குழந்தை இருப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த 15 ம் தேதி, வரதட்சணை கொடுக்கவில்லை என கூறி, தனது மாமியார் தன்னை அடித்ததாகவும், கணவர் நாஜிம் தனது மூக்கைக் கடித்து காயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.