மதுரையில் 1956-இல் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசியதாகவும், முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததால் அண்ணாவும், பி.டி.ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வந்ததாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். இந்நிலையில், அண்ணா பிறக்காமல் இருந்திருந்தால், அண்ணாமலை ஆடுதான் மேய்த்திருக்க வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். அண்ணாவால்தான், அண்ணாமலை ஐபிஎஸ் ஆனார்.

ஆனால், அண்ணாவை அண்ணாத்துரை என்று ஆணவமாக அழைக்கிறார். அவருடைய அழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. தன் தவறை திருத்திக் கொள்ளாவிட்டால். ஐபிஎஸ் ஆக பணி பார்த்த கர்நாடகாவிற்கு ஓடிப்போகும் நிலைமை ஏற்படும் என்று எச்சரித்தார்