ஏப்.14ம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என பாஜக மாநில
தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அமைச்சர்கள் எங்கு எங்கு முதலீடு செய்துள்ளார்கள், மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியல் என 2 லட்சம் கோடிக்கு ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும் இத்துடன் சேர்த்து வாட்ச் பில்லும் வெளியிடப்படும். இந்த பட்டியலை பார்த்தபின் யார் 420 என முடிவு பண்ணலாம்’ என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்திதொடர்பாளர் TKS இளங்கோவனிடம் கேட்டபோது, ‘திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிடட்டும், அதற்குத்தான் காத்திருக்கிறோம். அப்படியே, EPS, OPS மற்றும் அதிமுகவினரின் சொத்துப் பட்டியலையும் அவர் வெளியிட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.