பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இது தொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ஒருத்தருக்கு கொடுக்கக்கூடிய தண்டனை கிடையாது, பாவ விமோசனம் தான் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்வது. அப்படி பார்த்தால் அண்ணாமலை தான் செய்த தவறுகளுக்கு பாவ விமோசனம் தேடிக் கொள்வதற்காக தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டாரா.? இல்லையெனில் ஏதேனும் ஒரு தவறு செய்துவிட்டால் அதற்காக தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டாரா.? திமுக அரசு அவருக்கு எந்தவிதமான பாதகமும் செய்யவில்லை.

அவர் திமுக அரசை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை காலனி போட மாட்டேன் என்று கூறினால் அவர் வாழ்நாள் முழுவதும் காலனி போட முடியாது. ஞானசேகரன் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்படுவதோடு, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். இந்த வழக்கில் கைதான ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. போட்டோ எடுத்துக் கொண்டதை வைத்து தொடர்பு இருக்கு என்று கூற முடியாது. நீங்கள் ஏதாவது ஒரு தொடர்பை நிரூபித்தால் ஏற்றுக்கொள்கிறோம். மேலும் பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் அரசாங்கத்தால் மறைக்கப்பட்ட சம்பவம். ஆனால் இது அரசாங்கத்தால் மறைக்கப்படவில்லை. குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கி தரப்படும் என்றார்.