தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி அன்பும் பாசமும் வைத்துள்ளார் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டெல்லியில் எல். முருகன் இல்லத்தில் புத்தாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். தமிழக பாஜக எம்எல்ஏக்களும் செல்ல உள்ளோம். அண்ணாமலை அகில இந்திய தலைமையின் ஆலோசனை படியே பேசுகிறார். அவர் அவசரப்பட்டு எந்த ஒரு வார்த்தையையும் விடுபவர் அல்ல என்று நயினார் ராஜேந்திரன் கூறியுள்ளார்.