தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தமிழக டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்ததில் தமிழக பாஜகவினர் போராட்டம் நடத்திய போது திமுகவும் பாஜகவும் சேர்ந்து நாடகம் ஆடுவதாக விமர்சித்திருந்தார். இதற்கு அண்ணாமலை பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் போன்று நான் என்ன நடிகையின் இடுப்பை கிள்ளியா அரசியல் செய்கிறேன். வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யும் விஜய்க்கு தமிழக அரசியல் பற்றி என்ன தெரியும் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்திடம் இது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கழகத்தின் தலைவர் விஜயின் அறிவுறுத்தலின்படி மக்கள் சேவை செய்வது மட்டும்தான் தமிழக வெற்றி கழகத்தின் ஒரே நோக்கம். மற்றவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். மேலும் ஏற்கனவே நடிகர் விஜய் திமுக மற்றும் பாஜக மறைமுகமாக விரைவில் இருப்பதாக விமர்சித்து வரும் நிலையில் அவர்களை பாசிசம் மற்றும் பாயாசம் என்று கூறுகிறார். மேலும் அவர் தொடர்ந்து பாஜக மற்றும் திமுகவை அரசியல் எதிரிகள் என்று கூறும் தற்போது ஆனந்த் அண்ணாமலைக்கு எல்லா பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது என்று கூறியது பரபரப்பாக பேசப்படுகிறது.