அணு ஆயுதத்தை எடுத்துச் செல்லும் ஆற்றல் கொண்ட நீர்மூழ்கி படகை வடகொரியா சோதித்துப் பார்த்துள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. தென்கொரியா ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகையை இந்த வாரம் நடத்தியது.

இதற்கு பதிலடியாகத்தான் வடகொரியா இந்த நீர்மூழ்கி படகு சோதனையை மேற்கொண்டுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.