தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் மீரா சோப்ரா. இவர் நடிகர் எஸ்ஜே சூர்யாவின் அன்பே ஆருயிரே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் அர்ஜுனனின் மருதமலை என்ற திரைப்படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தமிழில் குறைந்த அளவு படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

நடிகை மீரா சோப்ராவை தற்போது தமிழ் சினிமாவில் பார்த்து பல வருடங்களாகும் நிலையில், அவர் தன்னுடைய லேட்டஸ்ட் வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் மருதமலை படத்தில் பார்த்தது போன்று தான் தற்போது நடிகை மீரா சோப்ரா இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவுக்கு தற்போது ரசிகர்கள் லைக்ஸ்களையும் குவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Meera Chopra (@meerachopra)