இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஏராளமான காணொளிகள் பகிரப்பட்டு அவ்வப்போது வைரல் ஆவது வழக்கம். அவ்வகையில் உத்தரபிரதேச மாநிலம்உன்னாவ்  பகுதியில் 7 இளைஞர்கள் ஒரு பைக்கில் பயணம் செய்து அதனை காணொளியாக பதிவு செய்துள்ளனர்.

இந்த காணொளியை பார்த்த காவல்துறையினர் பைக்கின் உரிமையாளருக்கு 16,000 ரூபாய் அபராதம் விதித்ததோடு அந்த ஏழு இளைஞர்களையும் கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர். இருசக்கர வாகனம் இருவருக்கு மட்டுமே என எவ்வளவு தான் கூறினாலும் இது போன்ற இளைஞர்கள் சாகசம் செய்வதாக நினைத்துக்கொண்டு வேடிக்கை காட்டுகிறார்கள்.