42 நாட்கள் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று உச்ச நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறை மற்றும் மகாராஷ்டிரா சிவ சேனா எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி சந்திர சூட் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தலைமை நீதிபதி அமர்வு 2,3,5நீதிபதிகள் கொண்ட அமர்வு உணவகம் ஆகிய இடங்களில் இலவச வைபை சேவை கிடைக்கும் எனவும் இந்த சேவையை வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனுதாரர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.