ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடந்த கொடூரமான மற்றும் மனிதக்குணமற்ற செயலொன்று சமீபத்தில் வெளிவந்து சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த நபர் பிடிபட்டது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் செப்டம்பர் 5ஆம் தேதி நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘streetdogsofbombay’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்த வீடியோவில், வான நீல நிற சட்டை அணிந்த ஒருவர், ஜோத்பூரில் உள்ள ஒரு கொட்டகைக்குள் ஒரு ஆட்டை தவறான முறையில்  அணுகுகிறார். சம்பவத்தை கண்ட சில நபர்கள், அதனை வீடியோவாக பதிவு செய்து, குற்றவாளியைக் நேரில் எதிர்கொண்டனர். வீடியோவில், குற்றம் சாட்டப்பட்ட நபர் மன்னிப்பு கேட்டபோதும், சிலர் அவரை அடித்து கடுமையாக எதிர்த்ததை காணலாம்.

https://www.instagram.com/reel/DOoWKouiEtU/?igsh=aGIxNG9tNm1oNWJm

இந்த வீடியோவைக் கண்காணித்து வந்த ‘streetdogsofbombay’ குழு, “இத்தகைய அருவருப்பான செயலை மேற்கொண்ட நபரை அடையாளம் காண, இந்த வீடியோவை பரப்புங்கள்” என சமூக ஊடக பயனர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து, பலரும் சமூக ஊடகங்களில் குற்றவாளியை கண்டறிய முயற்சித்து வருகின்றனர். மேலும், அவருக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பல்வேறு வலையமைப்புகளில் எழுந்துள்ளது.